Monday, September 5, 2011

தமிழ் பெண்



மழை வந்துபோகாத என்று ஏங்கினேன் !
மழை வர வேண்டினேன் !
தேங்கி நிற்கும் மழைநீரில் ,
தார் சாலையோரம் தலைகுனிந்து 
நடந்து போகும் என்னவளின் முகத்தை பார்க்க !
- தீ பிரேம்நாத்



அணைத்து கிடப்பவனை
முனகிக் கொண்டே
மெல்ல விலகி படுக்கிறாய்....

கெஞ்சி கெஞ்சி
கேட்ட பின்னும்
இரவை பகலாக்குகிறாய்


விழுந்துவிட்டேனென நினைத்து
சமையலறையிலிருந்து
பதறி வருகிறாய் ...

உடைந்த உன்னை மட்டும்
எதைக் கொண்டு அள்ளுவதென
புரியாமல் நிற்கிறேன்

No comments:

Post a Comment